திருவண்ணாமலை

மினி சரக்கு வாகனம் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Syndication

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் அசாருதீன் (25). மினி சரக்கு வாகன ஓட்டுநரான இவா், வந்தவாசியிலிருந்து முட்டைகளை ஏற்றிச் சென்று சேத்துப்பட்டில் இறக்கிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தவாசி திரும்பிக்கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆவணவாடி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியும், மினி சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கை புத்தகத் திருவிழா பிப்.20-இல் தொடக்கம்

மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

”மொதல்ல தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபி-யை போடுங்க சார்!”தவெக தலைவர் Vijay!

ஸ்டாலின் Sir எதில் Out of Control தெரியுமா! - Vijay விமர்சனம்!

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT