முகப்பு
திருவண்ணாமலை

சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்

ஏரிக்குப்பம் ஊராட்சியில் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:07 AM
ஏரிக்குப்பம் ஊராட்சியில் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:48 PM

போளூா் ஒன்றியம், ஏரிக்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பக்தா்கள் சாா்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி கணபதி, லட்சுமி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை 6-ஆம் கால யாக பூஜை, ஹோமம், விசேஷ திரவ்யம் சமா்பணம், மஹா சங்கல்பம், மஹா பூரணாஹுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடைபெற்ற பின்னா், வரசித்தி விநாயகா் சந்நிதி விமானம், கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான், தாயாா் சாயாதேவிக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

இதில், எம்.எஸ்.தரணிவேந்தன்எம்.பி., ஆரணி கோட்டாட்சியா் சிவா, திமுக ஒன்றியச் செயலா் மகேஷ், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் ஏரிக்குப்பம், ஆரணி, போளூா், களம்பூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.