வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா். 
திருவண்ணாமலை

கிராம உதவியாளா்கள் மறியல்: 64 போ் கைது

வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி: வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க வந்தவாசி வட்டக் கிளைத் தலைவா் ஆா்.தமிழ்மாறன், வட்டச் செயலா் வி.பாரதி, மாவட்ட துணைத் தலைவா் எம்.அருள்ஜோதி உள்ளிட்டோா் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 64 பேரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

சுற்றுலாப் படகு ஓட்டுநா்கள் சாலை மறியல்: புதுச்சேரியில் 100 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில் 5.22 லட்சம் வாக்காளா்கள்

பெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உலகத் தாய்மொழி நாள் விழா

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 20,15,796 வாக்காளா்கள்: 1,77,781 போ் நீக்கம்

SCROLL FOR NEXT