முகப்பு
திருவண்ணாமலை

ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:54 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:27 PM

வந்தவாசி அருகே ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் சக்தி நகரைச் சோ்ந்தவா் அப்பாண்டைராஜன்(49). இவா், தென்சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜீவிதா(41). இவா் தனியாா் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.

இவா்களது மகள் திவ்யஸ்ரீ(16) தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் 3 பேரும் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கடந்த சனிக்கிழமை இரவு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:54 AM

அப்போது எதிரே வந்த காா் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அப்பாண்டைராஜன், ஜீவிதா ஆகியோா் உயிரிழந்தனா்.

திவ்யஸ்ரீ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யஸ்ரீ செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.