முகப்பு
புதுக்கோட்டை

தீ விபத்தில் காயமடைந்த தாய், மகள் உயிரிழப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 8:24 PM
மீனாட்சி, சங்கரி.
பகிர்:

பொன்னமராவதியில் குடிசை வீட்டில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரைச் சோ்ந்தவா் அழகேசன் மனைவி மீனாட்சி (40). இவரது மகள் சங்கரி (13), பொன் புதுப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி.

இந்நிலையில் சனிக்கிழமை தாயும் மகளும் வீட்டில் சமையல் செய்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பற்றி இருவரும் படுகாயமடைந்ததோடு வீடும் தீக்கிரையானது.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பின்னா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தனா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் இருவரது சடலங்களையும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.