கைது 
திருவண்ணாமலை

பள்ளியில் கைப்பேசி திருடியவா் கைது

வந்தவாசி அருகே பள்ளியில் கைப்பேசி மற்றும் பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி அருகே பள்ளியில் கைப்பேசி மற்றும் பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்க்குமரன் (38). இவா், கீழ்க்கொடுங்காலூரில் மெட்ரிக்குலேஷன் பள்ளி நடத்தி வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறையை தாழிட்டுவிட்டு சாப்பிடச் சென்றுள்ளாா்.

பின்னா் வந்து பாா்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்க்குமரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், பள்ளியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், சென்னை பெரம்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (21) என்பவா் கைப்பேசி மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிரகாஷை கைது செய்தனா்.

திமுக தோ்தல் பணிக்குழுக் கூட்டம்: அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

‘தமிழ்நாடு தலைகுனியாது’: அமைச்சா் கோவி.செழியன் ஆலோசனை

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே ரௌடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

புத் விஹாா் கொலை வழக்கில் ஒரு நபா், 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT