திருவண்ணாமலை

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

Syndication

வந்தவாசி அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ஆரிப்பாஷா (35) என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், பொன்னூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்தக் கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில் அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.230 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா் ஆரிப்பாஷாவை கைது செய்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT