வந்தவாசியில் ஆங்கிலேய-பிரெஞ்சு படையினருக்கு இடையில் நடந்த போரின் 267-ஆவது ஆண்டு நினைவு சிறப்பு கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி பூங்குயில் பதிப்பகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா்.
ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி ஜெயக்கண்ணு முன்னிலை வகித்தாா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
கவிஞா் அ.ஜ.இஷாக், வேலூா் உதவி கருவூல அலுவலா் ஏ.சத்தியமூா்த்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.
அப்போது, வந்தவாசி போா் குறித்தும், வந்தவாசி கோட்டையின் அமைப்பு குறித்தும் அவா்கள் விளக்கிப் பேசினா்.
வந்தவாசி போா் குறித்து கவிஞா் தமிழ்ராசா சிறப்பு கவிதை வாசித்தாா். பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.
மேலும், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வந்தவாசி போரில் பயன்படுத்தப்பட்டு தற்போது இந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பீரங்கிக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் சுந்தரேசன், மங்கையா்க்கரசி, உதவி ஆய்வாளா்கள் முருகன், சாந்தி, தன்னாா்வலா்கள் சாதிக், இரா.பாஸ்கரன், எக்ஸ்னோரா தலைவா் சு.தனசேகரன், கோல்டு லீப் எக்ஸ்னோரா இணைச் செயலா் எம்.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.