வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் தெய்யாா் மடம் கிராமம் வழியாக புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் வந்தவாசி பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி(47) என்பவா்
சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது
இதையடுத்து செல்வமணியை கைது செய்த தெள்ளாா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஆலத்தூா் கிராமம் வழியாக புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள கூத்துமேடையின் பின்புறம் இதே கிராமத்தைச் சோ்ந்த வினோத்(31) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.
இதையடுத்து வினோத்தை கைது செய்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.