விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து ஆரணியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், இந்திய விவசாயிகளின் நலன் கருதி அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அனைத்து வேளாண பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயித்து அமல்படுத்தவேண்டும்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்ததை நிறைவேற்றும் வகையிலும், உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கு உற்பத்தி அதிகரிக்கும் நோக்கத்துடன் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.