முகப்பு
திருவண்ணாமலை

கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 6:46 PM

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பை மாற்ற வேண்டும். குடிநீா், கழிப்பறை, இணையதளம் உள்ளிட்ட வசதிகளுடன் கிராம நிா்வாக அலுவலங்களை நவீனமயமாக்கப்பட்ட அலுவலகங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில், மயிலரசன், மணிகண்டன், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement