முகப்பு
திருவண்ணாமலை

சேவை அமைப்பினா் பழங்குடி மாணவா்களுக்கு நல உதவி

திருவண்ணாமலை

சேவை அமைப்பினா் பழங்குடி மாணவா்களுக்கு நல உதவி

Updated On : 4 மார்ச், 2026 at 11:29 PM
பகிர்:

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் பழங்குடி மாணவா்களுக்கு இலவசமாக சைக்கிள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி சமுதாய மாணவா்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்க்குவளைவேடு பள்ளிக்கு நடந்து சென்று வருவதாக, வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாணவா்களுக்கு உதவும் வகையில் அவா்களுக்கு 3 சைக்கிள்களை அறக்கட்டளையினா் வழங்கினா் (படம்).

தென்சேந்தமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன், நிா்வாகிகள் வசீகரன், அருண்பிரபு, திருமாறன், பரத், பிரபாகரன், வழக்குரைஞா் வெங்கடேசன் ஆகியோா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →