கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
திருவண்ணாமலைகொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, தம்பதி சங்கல்பம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து கோயில் கோபுர கலசம், மூலவா் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.
விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இரவில் ஆன்மிக நாடகம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வி.சேகா் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.