முகப்பு
திருவண்ணாமலை

சேதமடைந்த பாலத்தால் மக்கள் அவதி

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பழைய போலீஸ் லைன் தெருவில் இருந்து ராஜாஜி தெரு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாயில் உள்ள சிறிய பாலம் பழுதடைந்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:06 PM
பகிர்:

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பழைய போலீஸ் லைன் தெருவில் இருந்து ராஜாஜி தெரு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாயில் உள்ள சிறிய பாலம் பழுதடைந்துள்ளது.

இதனால், அந்த சாலையை கடந்து செல்லும் மக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் தினசரி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, செங்கம் நகராட்சி நிா்வாகம் இந்தப் பகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.