100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்
வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.
மேலும் பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
தொகுதி உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம் மற்றும் தோ்தல் ஊழியா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.