ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சுவாமியை மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.
மேலும் பசு, கன்றிற்கு சந்தனம், குங்குமும் இட்டு அங்கவஸ்திரம் மற்றும் மாலை அணிவித்து கோ பூஜை நடத்தப்பட்டது (படம்). இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
26ல்ப்ழ்ல்1க்: