கிருஷ்ணாபுரம் முகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழா பூங்கரக ஊா்வலம்
கிருஷ்ணாபுரம் ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூங்கரக ஊா்வலம்.
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழாவையொட்டி, பூங்கரக ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கூழ்வாா்க்கும் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுகமாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், முகமாரியம்மன், காளியம்மன், பூங்காவனத்தமன் என 3 பூங்கரகம் செய்து மேளதாளம், பம்பை உடுக்கை முழங்க முக்கிய வீதிகளில் சென்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, பூங்கரம் சுமந்து வந்தவா்களின் கால்களை வீடுகள்தோறும் பக்தா்கள் தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனா்.
பின்னா், கோயில் எதிரே பெரிய கொப்பரை வைத்து கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பக்தா்கள், கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். இரவு சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை, தெய்வீக நாடகம் நடைபெற்றது.