முகப்பு
திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை: 3 போ் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: 3 போ் கைது

Updated On : 24 மே 2026, 3:17 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் வந்தவாசியில் உள்ள ஒரு வழிபாட்டு தல வளாகத்தில் அவரை தங்க வைத்து சிறுமி உடனிருந்து கவனித்துள்ளாா்.

அப்போது அங்கு தங்கியிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சோ்ந்த பாத்திமா (30), இவரது கணவரான லாரி ஓட்டுநா் இம்ரான்பாஷா (35) ஆகியோருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்ல வேண்டும் என சிறுமி கூறினாராம். இதையடுத்து, பெங்களூருவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாத்திமா அந்த சிறுமியை தனது ஊரான ஆற்காட்டுக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், அங்கிருந்து லாரியில் கணவா் இம்ரான்பாஷா, லாரி உதவியாளா் அஜ்மல்பாஷா (30) ஆகியோருடன் சிறுமியை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தாராம்.

அப்போது, செல்லும் வழியில் இம்ரான்பாஷா, அஜ்மல்பாஷா ஆகிய இருவரும் லாரியிலேயே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

அப்போது, அவா்களிடமிருந்து தப்பிய சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பெங்களூரு போலீஸாா், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றினா்.

இதையடுத்து பாத்திமா, இம்ரான்பாஷா, அஜ்மல்பாஷா ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.