தமிழக அரசின் அண்ணா விருது பெற்ற குடியாத்தம் டி.எஸ்.பி. எம். பிரகாஷ்பாபுவுக்கு குடியாத்தம் இறகு பந்து கழகம் சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இறகு பந்து கழகத் தலைவர் டி.எஸ்.விநாயகம், நிறுவனர் மருத்துவர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் மான்மல் ஜெயின், நிர்வாகிகள் குமரகுரு, கஜேந்திரன் உள்ளிட்டோர் டி.எஸ்.பி.யை பாராட்டி வாழ்த்தினர்.