வேலூர்

ரயில் மீது ஏறிய பள்ளி மாணவர்  மின்சாரம் பாய்ந்ததில் காயம்

DIN

ராணிப்பேட்டை அருகே ரயில் என்ஜின் மீது ஏறிய பள்ளி மாணவர் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தார். 
ராணிப்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்தவர் பரக்கத் (17). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை   முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜின் மீது ஏறியுள்ளார். அப்போது ரயில் என்ஜினுக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். 
இதையடுத்து, பரக்கத்  மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT