வேலூர்

ஆட்டோ மோதியதில் விவசாயி சாவு

DIN

ஆற்காடு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
 திமிரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (47). இவர் கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து விவசாய நிலத்துக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திமிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகில் ஆற்காடு-ஆரணி சாலையில் வந்தபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம், வேலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திமிரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT