ஆற்காடு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
திமிரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (47). இவர் கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து விவசாய நிலத்துக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திமிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகில் ஆற்காடு-ஆரணி சாலையில் வந்தபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம், வேலூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திமிரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.