அரக்கோணத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தை எம்எல்ஏ சு.ரவி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
அரக்கோணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டுத் துறையின் உள்ளரங்கத்தில் இதற்கான விழா நடைபெற்றது. பயிற்சியாளர் ப.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். எம்எல்ஏ சு.ரவி குத்துச்சண்டை பயிற்சி மையத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சீருடைகள், பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபிநாத், பயிற்சியாளர்கள் யுவராஜ், குமரேசன், இம்ரான், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயந்தி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.