ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம், பாடுவன் மாவட்டம், பவித்ரா கிராமத்தைச் சேர்ந்த அஜீஸ் மகன் முஜிப்பூர் ரகுமான் (22). இவர், சிப்காட் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் தனது நண்பர் ஜெய்ப்பூர் மாநிலம், ஆதேஷ் நகர், கச்சிவெண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் சந்திராவுடன் (40) புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் அக்ராவரம் கிராமத்தில் உள்ள கடைக்குச் சென்று விட்டு, மீண்டும் தொழிற்சாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விட்டு நிற்கமால் சென்றதாகத் தெரிகிறது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முஜிப்பூர் ரஹ்மான் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீஸில் ராஜீவ் சந்திரா அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.