வேலூர்

கார் மோதியதில் பெண் சாவு

DIN

ஆற்காடு அருகே கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.
ஆற்காட்டை அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி முனியம்மாள் (50).
விவசாய கூலித் தொழிலாளி இவர், திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தில் உள்ள தனது மகள் கங்கா வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில், திங்கள்கிழமை முனியம்மாள், மகள் கங்காவுடன் அப்பகுதியில் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த கார் முனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அருகே இருந்தவர்கள் முனியம்மாளை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில்  திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT