மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்ற ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
வித்யாபாரதி பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகள் சென்னை திருவொற்றியூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் ஜூனியர் பிரிவில் மாணவர்கள் வி. விமல், ஆர். பரத், எஸ். ஜெயந்த், ஜி. சதீஷ், வி. நந்தகுமார் ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். மாணவிகள் ஆர். பிருதீக்ஷா, எஸ். தேவதர்ஷினி ஆகியோர் 2-ஆம் இடம் பிடித்துள்ளனர். சூப்பர் சீனியர் பிரிவில் ஒய்.ராஜேஸ்வரி, கே.மீனா, எஸ்.பூர்ணிமாபூஜா, யு.சாருமதி ஆகியோர் 2-ஆம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம். தீனதயாளன், பள்ளி முதல்வர் ஜி. நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் கே. சக்கரபாணி, வி. ராம்கீ ஆகியோர் பாராட்டினர்.