முகப்பு
வேலூர்

கிணற்றிலிருந்து மாணவரின் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து பள்ளி மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து பள்ளி மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. 
வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (15). இவர், அம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். புதன்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற சந்துரு இரவு வீடு திரும்பவில்லையாம். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை கொடையாஞ்சி பாலாற்றின் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சந்துரு சடலமாகக் கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அம்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →