வேலூர்

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

வாணியம்பாடி அருகே 15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (30) அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 15 வயது சிறுமிக்கும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையறிந்த வேலூர் சமூக நலத் துறை அலுவலர்கள், வாணியம்பாடி வருவாய்த் துறையினர் மற்றும் கிராமிய போலீஸார் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு அங்கு சென்று விசாரித்தனர். பின்னர் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT