முகப்பு
வேலூர்

குடிசைக்குள் புகுந்த பாம்பு

குடியாத்தம் அருகே குடிசை வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:39 AM
பகிர்:

குடியாத்தம் அருகே குடிசை வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது. 
குடியாத்தம் அருகே சித்தூர்கேட்டைச் சேர்ந்தவர் பீடித் தொழிலாளி பாபு.  ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது குடிசை வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி தலைமையில் வந்த  தீயணைப்பு வீரர்கள் சண்முகம், சுரேஷ், கோவிந்தராஜ், சிவகுமார் உள்ளிட்டோர் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.