வேலூர்

பைக்கிலிருந்து பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு

DIN

வேலூர் அருகே பைக்கில் வந்த பெண்ணை கீழே தள்ளி, 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள்  பறித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் சாலை விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகையைச் சேர்ந்தவர் குமார் (51). இவரது மனைவி சுமலதா(45). இருவரும் ரத்தினகிரி கோயிலுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பெருமுகை அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர்,  சுமலதாவின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். 
இதில், நிலை தடுமாறி சுமலதா சாலையில் விழுந்தார். எனினும், மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். 
சாலையில் விழுந்த சுமலதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸார், அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலீஸார் வழக்குப் பதிந்து,  மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT