அரசுப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்விக் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் மகேந்திரன், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, கல்வியின் பயன்கள், பள்ளியின் சிறப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.