வேலூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சுகாதாரச் சீர்கேட்டுடனும், மருத்துவர்கள் அலட்சியப் போக்குடனும் இருப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேலூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் மாநகர துணைச் செயலர் கே.லோகேஷ்குமார் தலைமை வகித்தார்.  
அரியூர் வட்டச் செயலர் ஏ.மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஆர்.தேவதாஸ் கண்டன உரையாற்றினார். மாநகரச் செயலர் எஸ்.ஏ. சிம்புதேவன், நிர்வாகிகள் சரோஜா, கோவிந்தன், கோவிந்தராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT