27-இல் ஆடு வளர்ப்பு பயிற்சி
ஆடுகளின் வளர்ப்பு முறை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி 27-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.
ஆடுகளின் வளர்ப்பு முறை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி 27-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி, பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில், ஆடுகளின் வளர்ப்பு முறை, சினைக்காலம், கருத்தரிப்புத் திறனை, அதை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளன.