வேலூர்

ரயிலில் இருந்து தவறி விழுந்த  இளைஞர் சாவு

DIN

குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அடையாளம் தெரியாத இளைஞர் உயிரிழந்தார்.
 குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் ஓரம் இளைஞர் ஒருவர் காயத்துடன் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை வந்த தகவலையடுத்து  108 ஆம்புலன்ஸ் அங்கு சென்றது. அங்கு அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் காயத்துடன் இருப்பது தெரிய வந்தது. குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவர் இறந்தார்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த இளைஞர் அவ்வழியே சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT