வேலூர்

பள்ளி வேன் கதவு இடித்து சிறுவன் சாவு

DIN

காவேரிபாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது அவ்வழியே வந்த பள்ளி வேனின் கதவு இடித்ததில் அச்சிறுவன் இறந்தான்.
காவேரிபாக்கத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் பர்வீன்குமார் (6). இவர் அங்குள்ள பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை பர்வீன்
குமார், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே மாணவர்களுடன் தனியார் பள்ளி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. பர்வீன்குமார் அருகே வந்த போது, வேனின் கதவு திடீரென திறந்து அவர் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த பர்வீன்குமார் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து காவேரிபாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பள்ளி வேனை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT