வேலூர்

மினி வேனில் கடத்தி வரப்பட்ட 875 லிட்டர்  எரிசாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

வாலாஜாபேட்டை அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 875 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு சிறப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது  செய்யப்பட்டார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள வாணிச்சத்திரம் பகுதியில் வேலூர் மாவட்ட மதுவிலக்கு சிறப்புப் பிரிவு போலீஸார் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அவ்விழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்  25 கேன்களில் சுமார் 875 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எரிசாராயத்துடன் மினி வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் எரிசாராயம் கடத்தி வந்த விஷாரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (எ) விஜயக்குமாரை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் ஏற்கெனவே எரிசாராயம் கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT