குடியாத்தம் கிளை நூலகத்தில் உலக மகளிர் தினத்தை யொட்டி, திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கவிஞர் முல்லைவாசன் தலைமை வகித்தார். நூலகர் து.ரவி வரவேற்றார். வேலூர் மாவட்ட மகளிர் திட்ட துணை இயக்குநர் ஜெயகாந்தன் நூலகத்துக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புதிய நூல்களை வழங்கினார்.
சரஸ்வதி வித்யாலயா பள்ளி முதல்வர் பி.சாந்தி, மகளிர் சிந்தனை மாத இதழ் ஆசிரியர் எஸ்.டி. சங்கரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வி.இ. சிவக்குமார் நூலகத்தின் புரவலராகவும், சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் 500 மாணவர்கள் நூலக உறுப்பினர்களாகவும் இணைந்தனர். நூலகர் ஆ.ச. மதன் நன்றி கூறினார்.