குளிர்சாதன இயந்திரம் வெடித்து காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2-இல் 12-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (80). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு வீராசாமி படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறியது.
படுக்கை விரிப்புகளின் மீது பற்றிய தீ வீராச்சாமி மீது பற்றி எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த வீராச்சாமி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வீராசாமி வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.