முகப்பு
வேலூர்

தொழிலாளி கொலை: தாய், மகன் கைது

அரக்கோணம் அருகே கள்ள மது விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை கொலை செய்ததாக தாய், மகனை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 14 மே, 2018 at 11:48 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

அரக்கோணம் அருகே கள்ள மது விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை கொலை செய்ததாக தாய், மகனை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரமேஷின் மகன் சன்ராஜ் (20). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் அரசு டாஸ்மாக் கடையின் மதுவை வாங்கியதாகத் தெரிகிறது. அப்போது அவருக்கும், அந்த கடை உரிமையாளரான லலிதா(எ) ஜெயலலிதாவுக்கும் (47) தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதாவும், அவரது மகன் சுதாகர் (எ) சேட்டுவும்(22) சேர்ந்து சன்ராஜை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சன்ராஜ், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா, சேட்டு ஆகியோரை கைது செய்த அரக்கோணம் கிராமிய போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.