முகப்பு
நாமக்கல்

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:57 AM
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற மலா் அபிஷேகம்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:52 PM

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

தமிழ் ஆண்டான விசுவாவசு நிறைவடைந்து புதிய ஆண்டான பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இந்நாளில் சித்திரை விஷு கனி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரண்டு டன் மலா்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.