ஆற்காட்டை அடுத்த சித்தேரி மதகு அருகே வழியை ஆக்கிரமித்து கோயில், மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்ஆற்காடு வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக ஆற்காடு வட்டாட்சியர் சுமதியிடம் பொதுமக்கள் அளித்த மனு:
திமிரி பாத்திகாரன் பட்டி சித்தேரி மதகு அருகே நீர்வழிப் பாதை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு அம்சவேணி அம்மன் கோயில் மற்றும் மண்டபம் கட்டுகின்றனர். இதனால் அவ்வழியாக நிலங்களுக்குச் செல்வதிலும், விளை பொருள்களை எடுத்துவருவதிலும் சிரமம் உள்ளது. எனவே, சித்தேரி மதகு பகுதியில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.