பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்திய மண்டலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் வேலூரில் அண்மையில் நடைபெற்றன.
இதில், கே.எம்.ஜி.கல்லூரி மாணவர்கள் கே.உதயகுமார் நீளம் தாண்டுதலில் 2-ஆம் இடமும், டி.விக்ரம் கோலூன்றி தாண்டுதலில் 2-ஆம் இடமும், ஜி. கணேஷ் கோலூன்றி தாண்டுதலில் 3-ஆம் இடமும், எஸ்.ஜெகதீஷ் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3-ஆம் இடமும், பி.மோகன்ராஜ் அரை மாரத்தான் போட்டியில் 3-ஆம் இடமும் பிடித்து சாதனை
படைத்தனர்.
அந்த மாணவர்களை கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், இயக்குநர் த.கஜபதி, முதல்வர் எம்.ஜெயஸ்ரீராணி, உடற்கல்வி பேராசிரியர்கள் ஆர்.ரஞ்சிதம், பி.ஞானகுமார் ஆகியோர் பாராட்டினர்.