வேலூர்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

DIN

ஜோலார்பேட்டை அருகே மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). லாரி கிளீனரான இவருக்கு மரியாள் என்ற மனைவியும், நதீன் என்ற மகனும் உள்ளனர். சுரேஷுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 7ஆண்டுகளாக மரியாள் மகனுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆசிரியர் நகரை அடுத்த வள்ளலார் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் தூணில் பள்ளி மாணவர்களின் பெல்டில்  தூக்கில் தொங்கிய நிலையில் சுரேஷ் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸாருக்கு அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT