விஐடி பல்கலைக்கழகமும், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் செய்து கொண்டன.
பிரான்ஸ் கலாசாரம் மற்றும் மொழி பயிற்று மையத்தை விஐடி வேலூர் வளாகத்தில் அமைக்க ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், பிரான்ஸ் தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் சாம்சன் இமானுவேல், கிறிஸ்டினி கார்னெட், விக்டோரியா டோபிரிக்ஸ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. விஐடி பதிவாளர் கே.சத்தியநாராயணன், சமூக அறிவியல் மற்றும் மொழிகளின் துறைத் தலைவர் ஜி.வேல் முருகன், சர்வசேத உறவு துறை உதவி இயக்குநர் ஆர்.சத்திய நாராயணன் ஆகியோர்
உடனிருந்தனர்.