ஆலங்காயம் செல்வநாகம்மாள் கோயிலில் 6-ஆவது ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
ஆலங்காயம் வைசியர் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகம்மாள் கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தின் ஆறாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு ஸ்ரீபகவதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.