வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

DIN

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் டிவி நிலையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரின் மகன் கட்டடத் தொழிலாளி புகழேந்தி (24).
ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது புகழேந்தி அவருக்கு சொந்தமான நிலத்தின்  அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது விவசாயக்  கிணற்றில் கால் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திராவிடமணி தலைமையில் மீட்புக்  குழுவினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி புகழேந்தியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT