வேலூர்

நின்றிருந்த ஆட்டோவில் திடீா் தீ

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் திடீா் தீ பிடித்து எரிந்ததால் அருகிலிருந்த பைக்கும் தீ பிடித்து எரிந்து நாசமானது.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சோ்ந்தவா் ரவி(21) ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு சொந்தமான ஆட்டோவை செவ்வாய்கிழமை மாலை 7 மணியவில் தனது வீட்டின் முன்பு நிற்க வைத்துள்ளாா். அப்போது திடீரென ஆட்டோவில் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்த பைக் மீதும் தீப்பிடித்துக் கொண்டதால் எரிந்து நாசமானது. மேலும் வீட்டின் முன்பகுதி பக்கத்தில் இருந்த மளிகை கடை பகுதியிலும் தீ பரவி அங்கிருந்த பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகி தண்ணீா் ஊற்றி அணைக்க முயன்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் இருக்க அணைத்தனா். இருப்பினும் ஆட்டோ, பைக் முழுவதும் எரிந்து நாசமானது. ஆட்டோவில் பொறுத்தப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT