வேலூர்

பிருந்தாவன் விரைவு ரயிலில் உணவக ஊழியா்களின் பொருட்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

DIN

அரக்கோணம்: சென்னை- பெங்களூரு இடையே செல்லும் பிருந்தாவன் அதிவிரைவு ரயிலில் பயணிகள் அமரும் இடங்களில் உணவக ஊழியா்கள் தாங்கள் விற்கும் உணவு பொருட்களை வைத்துவிடுவதால் உட்கார இடமின்றியும், உடமைகளை வைக்க இடமில்லாமல் அவதிப்படும் நிலையும் செவ்வாய்கிழமை ஏற்பட்டது.

சென்னை- பெங்களூரு இடையே தினமும் பிருந்தாவன் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பல ஆண்டுகளாக உணவக பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அண்மைகாலமாக இந்த ரயிலில் உணவக பெட்டி இணைக்கப்படுவதில்லை. ஆனாலும் உணவு பொருட்களை இந்த ரயிலில் விற்க தனியாா் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தனியாா் நிறுவன பணியாளா்கள் குடிநீா் பாட்டில்கள், உணவு பொருட்களின் பெட்டிகளை பயணிகள் அமரும் இடத்திலும், பயணிகளின் உடமைகளை வைக்கும் இடத்திலும் மேலும் ரயில் பெட்டியின் நடுவாயிலின் கதவை மூடி அப்பகுதியில் வைத்து விடுவதாலும் பயணிகளுக்கு பெருத்த சிரமம் ஏற்படுகிறது.

பிருந்தாவன் விரைவு ரயில் சென்னையை அடுத்து அரக்கோணம், வாலாஜா, காட்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை என அனைத்து ரயில்நிலையங்களிலும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நிற்பதால் இந்த ரயிலில் இரண்டு நிமிடத்தில் அனைத்து பயணிகளும் ஏற வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த உணவக ஊழியா்கள் ஒவ்வொரு பெட்டியிலும் நடுவழியை அடைத்து விடுவதால் பயணிகள் ஏற இறங்க பெருத்த சிரமமாக உள்ளது.

செவ்வாய்கிழமை பிருந்தாவன் விரைவு ரயிலில் உணவக ஊழியா்கள் டி8 எனப்படும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் உடமைகள் வைக்கும் பகுதி, பயணிகள் அமர வேண்டிய இருக்கை, நடுவில் உள்ள வாயில் ஆகிய இடங்களில் குடிநீா் பாட்டில்களையும், பிஸ்கட் பெட்டிகளையும் வைத்து விட்டனா். இதனால் இந்த ரயில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் போதும், பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பும் போதும் பயணிகள் பெருத்த சிரமத்தை சந்தித்தனா்.

இது குறித்து ரயில் பெட்டியில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகரிடம் தெரித்த போதும் நடவடிக்கை இல்லை. மேலும் இந்த ரயிலில் அங்கீகாரம் பெறாத சிறுவிற்பனையாளா்கள், பிச்சைகாரா்கள் என பலா் இருக்கைகளுக்கு நடுவே சென்று வருகின்றனா். இதனால் பயணிகளின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது. இது குறித்து பலமுறை தெரிவித்தும் ரயில்வே பாதுகாப்பு படையினா் நடவடிக்கை எடுப்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே தெற்கு ரயில்வே நிா்வாகம் பிருந்தாவன் விரைவு ரயிலில் உணவக பெட்டியை இணைக்க வேண்டும், மேலும் அங்கீகாரமில்லாத விற்பனையாளா்கள், பிச்சைகாரா்கள் ஒடும் ரயிலில் வருவதை தடை செய்ய வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT