போ்ணாம்பட்டு அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த மோகன் மகன் மதன்குமாா்(20). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த நவம்பா் மாதம் 25- ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை மதன்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.