வேலூர்

வாணியம்பாடியில் பிடிபட்ட அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை

DIN

வாணியம்பாடி அருகே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய  வகை ஆந்தை பிடிபட்டது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் கல்லறைத் தெருவில்  தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வித்தியாசமான வெள்ளை ஆந்தை ஒன்று தென்னை மரத்தில் அமர்ந்திருந்தது. அதைக் கண்ட பத்துக்கும் மேற்பட்ட காக்கைகள் அந்த ஆந்தையை   சுற்றி வந்து கொத்தின. 
இதனால் காயமடைந்த ஆந்தை பறந்து சென்று அருகே இருந்த அருள் என்பவரின் வீட்டின் மேல் அமர்ந்தது. இதையடுத்து காக்கைகளை விரட்டிய அப்பகுதி இளைஞர்கள், அந்த ஆந்தையை மீட்டு வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். அவர்களிடம் ஆந்தையை ஒப்படை த்தனர். பிடிப்பட்ட ஆந்தை  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஆந்தை  ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT