வேலூர்

மோசடி செய்ய முயன்றவர் கைது

DIN

குடியாத்தம் அருகே நகைக் கடையில் பித்தளை மோதிரத்தை தங்க மோதிரம் என்று கூறி விற்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் ஜோசஃப்(45). அவர் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள ஒரு நகைக் கடையில் வெள்ளிக்கிழமை தனது தங்க மோதிரத்தை விலைக்கு விற்க வந்ததாகக் கூறினார். கடைக்காரர் அந்த மோதிரத்தை வாங்கி உரசிப் பார்த்தபோது அது பித்தளை மோதிரம் என்பது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸார் ஜோசஃபைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பல கடைகளில் இதுபோல் பித்தளை மோதிரங்களை தங்க  மோதிரம்  எனக்கூறி மோசடியாக விற்றுப் பணம் பெற்று வந்தது தெரிந்தது.  அவரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT